Homeசெய்திகள்தமிழ்நாடுஇளைஞரை காவலர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு!

இளைஞரை காவலர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு!

-

 

இளைஞரை காவலர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் 19 வயதான லோகேஷ் என்ற இளைஞர் போதையில் தகராறில் ஈடுபடுவதாக ஆவடி காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற தலைமை காவலர் சரவணன், போதையில் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த இளைஞரைப் பிடிக்க முயன்றார்.

“யாரையும் பழிவாங்க வேண்டாம்”- ஜெயக்குமாரின் மற்றொரு கடிதம் வெளியீடு!

அப்போது அந்த இளைஞர், காவலர் மற்றும் பொதுமக்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினார். இதனால் உடனடியாக காவலர் சரவணன் அருகில் இருந்த ஒரு கட்டையை எடுத்து போதை ஆசாமியை தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி லோகேஷ் அருகில் இருந்த கற்களை எடுத்து காவலர் மீது வீசி தாக்க முயற்சிக்கிறார். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக லோகேஷின் தாய் மற்றும் பொதுமக்கள் அவரைப் பிடித்தனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன்பிறகு லோகேஷை காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல்துறையினர், போதை தெளிந்த பிறகு விசாரணை நடத்தி இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

‘சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு’- 2 பேர் கைது!

ஆவடி காவல் ஆணைரகத்துக்கு உட்பட்ட ஆவடி, திருமுல்லைவாயில், பூந்தமல்லி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் போதையில் தொடர் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. ஆகையால் இளைஞர்கள் சீரழிவதைத் தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

MUST READ