Homeசெய்திகள்வானிலைதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: மஞ்சள் எச்சரிக்கை!

-

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: மஞ்சள் எச்சரிக்கை!தமிழ்கத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நிலவிவரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று நள்ளிரவில் கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் நீலகிரி, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை இசிஆர் அகலப்படுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது

குறிப்பிட்ட 8 மாவட்டங்களை தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொருத்தவரை சில சமயங்களில் தரைக்காற்று அதிகம் வீசுவதோடு மாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

MUST READ