Homeசெய்திகள்வானிலைநீலகிரி, கோவையில் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை

நீலகிரி, கோவையில் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை

-

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

நீலகிரி, கோவையில் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை

ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக 12 முதல் 20 செ.மீ. வரை மழை பொழிவிற்கான வாய்ப்பு இருப்பதால் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

5 மாவட்டங்களில் ஜூன் 24, 25-ல்  நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவையில் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் ஜூன் 24, 25, 26 ஆகிய 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆவடியில் பலத்த காற்றுடன் கொட்டி தீரத்த மழை (apcnewstamil.com)

கர்நாடகாவில் இன்றும், நாளையும் அதிகனமழைக்கும், அதற்கடுத்த 3 நாட்கள் மிக கனமழையும் கேரளாவில் ஜூன் 22, 24, 25, 26 ஆகிய 4 நாட்கள் மிக கனமழைக்கும், ஜூன் 23 அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

MUST READ