Homeசெய்திகள்பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப் போகும் அந்த நபர் யார்?

பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப் போகும் அந்த நபர் யார்?

-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப் போகும் அந்த நபர் யார்? இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சீரியல்களை விட டிஆர்பி அதிகம் ஏறும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. அதற்கு அடையாளம் வெற்றிகரமாக நடந்து முடிந்த முதல் ஏழு சீசன்கள் தான். இந்த முதல் ஏழு சீசன்களையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அதன் பிறகு தற்போது எட்டாவது சீசன் தொடங்கி இருக்கும் நிலையில் இதனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப் போகும் அந்த நபர் யார்? கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் தான் இந்த சீசன் கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரஞ்சித், தீபக், ஜாக்லின், தர்ஷா குப்தா, ரவீந்தர் உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் 24 மணி நேரத்தில் சாச்சனா முதல் ஆளாக எலிமினேட் செய்யப்பட்டார். இரண்டாவது நாளே அவர் எலிமினேட் செய்யப்பட்டது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் நிகழ்ச்சியின் சுவாரசியத்தையும் அதிகப்படுத்தியது. அதன்படி மூன்று நாட்களுக்குள் ஏகப்பட்ட சண்டை நடந்து ஆண்கள் அணி இரண்டாகப் பிரிந்துள்ளது. இந்த நிலையில் நான்காவது நாள் ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டது. பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப் போகும் அந்த நபர் யார்?அந்த வீடியோவில் ரவீந்தர் பிக் பாஸ் சீசன் 8-ல் இந்த வீட்டை விட்டு வெளியேறப் போவது யாரு என அறிக்கை ஒன்றை வாசிக்கிறார். அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் பெயரைச் சொல்லி அவர்கள் தான் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்று சொல்கிறார்கள். அதிலும் ரஞ்சித் பெயர் அடிபடுகிறது. ஆனால் ரஞ்சித்திற்கு ஓட்டுகள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் ரவீந்தர், ஜாக்லின், அருண் பிரசாத் போன்றோர் டேஞ்சர் சோனில் இருப்பதால் இவர்களில் யார் வெளியேறப் போகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் விவாதித்து வருகின்றனர்.

MUST READ