Homeசெய்திகள்உலகம்புதிய சட்டத்திற்கு எதிராக ஜார்ஜியாவில் போராட்டம்

புதிய சட்டத்திற்கு எதிராக ஜார்ஜியாவில் போராட்டம்

-

புதிய சட்டத்திற்கு எதிராக ஜார்ஜியாவில் போராட்டம்

ஜார்ஜியாவில் தனியார் நிறுவனங்கள் வௌி நாடுகளில் இருந்து நிதி பெறுவது தொடர்பான புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு எதிரான சட்டம்

ஜார்ஜியாவில் உள்ள நிறுவனங்கள், வௌி நாடுகளில் இருந்து 20 சதவீதத்துக்கு அதிகமாக நிதி பெற்றால் அந்த நிறுவனங்கள் வௌிநாட்டு ஏஜெண்ட் என்ற பெயரில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற புதிய சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வர உள்ளது. ரஷ்யாவில் இதே போன்று ஒரு சட்டம் 2012ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தை வைத்து, அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்போர் மீது ரஷ்யா நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த சட்டத்திற்கு ஜார்ஜியாவில் பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்நாட்டு தலைநகர் பிலிசியில் நாடாளுமன்றம் முன்று ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற வளாகம் முன்பு குவிந்த போராட்டக்காரர்கள்

போராட்டக்கார்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்களும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதால் அங்கு வன்முறை வெடித்தது.

MUST READ