- Advertisement -
வட இத்தாலி: வரலாறு காணாத வெள்ளம்; முக்கிய நகரம் மூழ்கியது
இத்தாலி நாட்டில் வடக்கு பகுதியில் உள்ள எமிலியா-ரோமக்னா மாகாணம் வெள்ளத்தில் சிக்கியதால் மக்கள் தத்தளித்து வருகின்றனர்.
இத்தாலி நாட்டில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் எமிலியா-ரோமக்னா மாகாணம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எமிலியா-ரோமக்னா மாகாணத்தின் தலைநகர் போலோக்னா நகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கார் உட்பட ஏராளமான வாகனங்கள் மூழ்கி கிடக்கின்றன. குடியிருப்புகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்ற வருகிறது.