இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து தினமும் அதிகாலை 2 மணிக்கு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு, அதிகாலை 3 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேரும்.அந்த விமானம் மீண்டும்,அதிகாலை 4 மணிக்கு, சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டு செல்லும். அதைப்போல் மாலை 3 மணிக்கு இலங்கையில் இருந்து சென்னை வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மீண்டும் மாலை 4 மணிக்கு, சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டு செல்லும்.
https://www.apcnewstamil.com/news/chennai/stolen-vehicles-detected-using-ivms-technology/95480
இதைப்போல் தினமும் இயக்கப்படும், இலங்கை-சென்னை 2 வருகை விமானங்கள் மற்றும் சென்னை-இலங்கை 2 புறப்பாடு விமானங்கள், மொத்தம் 4 விமானங்கள் இன்று ஒரே நாளில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த விமானங்களில் இலங்கை செல்லும் பயணிகள் மட்டுமின்றி, இலங்கை வழியாக, மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் போன்றவைகளுக்கு செல்லும் டிரான்சிட் பயணிகளும் உள்ளனர்.இந்த நிலையில் இன்று திடீரென இந்த 4 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.நிர்வாக காரணங்களால், இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த விமானங்களில் பயணிக்க வேண்டிய பயணிகள்,வேறு விமானங்களில் அனுப்பி வைக்கப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.