Homeதிருக்குறள்1- கடவுள் வாழ்த்து

1- கடவுள் வாழ்த்து

-

- Advertisement -

கடவுள் வாழ்த்து

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.

கலைஞரின் குறல் விளக்கம் – அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை : ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்.

கலைஞரின் குறல் விளக்கம் – தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கிநிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தாா்
    நிலமிசை நீடுவாழ் வார்.

கலைஞரின் குறல் விளக்கம் – மலர் பொன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு. உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

4. வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல.

கலைஞரின் குறல் விளக்கம் – விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

5. இரள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    போருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

கலைஞரின் குறல் விளக்கம் – இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வாா்கள்.

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றாா் நீடுவாழ் வாா்.

கலைஞரின் குறல் விளக்கம் – மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப் படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது.

கலைஞரின் குறல் விளக்கம் – ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடையஅடி யொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது.

கலைஞரின் குறல் விளக்கம் – அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோா் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை.

கலைஞரின் குறல் விளக்கம் – உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
      இறைவன் அடிசேரா தாா்.

கலைஞரின் குறல் விளக்கம் – வாழ்க்கை எனும் பெருங்கடலை  நீந்திக் கடக்க முனைவோர், தலையான வனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

MUST READ