HomeGeneralவிமர்சனங்களை கண்டு ஒரு நாளும் அஞ்சியதில்லை- குஷ்பு

விமர்சனங்களை கண்டு ஒரு நாளும் அஞ்சியதில்லை- குஷ்பு

-

டெல்லியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பொறுப்பேற்றுக்கொண்டார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு 3 ஆண்டுகள் வரை பொறுப்பில் நீடிப்பார்.

kushboo

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “நான் ஏற்கனவே பெண்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறேன். பெண்களின் உரிமைகளுக்காகவும் நலனுக்காகவும் நான் எந்தளவுக்கு பேச வேண்டுமோ அந்தளவுக்கு பேசி வருகிறேன். இதற்கு எழும் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் கண்டு ஒரு நாளும் அஞ்சியதில்லை. முன்பைக் காட்டிலும் இன்னும் கூடுதல் துணிச்சலுடன் பெண்களுக்காக என்னால் குரலை உயர்த்தி பேசவும் முடியும், போராடவும் முடியும்” எனக் கூறினார்.

MUST READ